world

img

“அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள்”

வாஷிங்டன், ஜூலை 22- அமெரிக்காவில் உள்ள அனைவரின் கைகளி லும் துப்பாக்கிகளைத் திணித்துத் தங்கள் வியா பாரத்தைப் பெருக்கிக் கொள்வதே முதலாளி களின் இலக்காக இருக்கிறது என்று நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.  ஜூன் மாதம் வரையிலான அரையாண்டில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்  அமெரிக்காவில் நடந்துள்ளன. ஜூன் 1, 2022 அன்று துல்சா மருத்துவக் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.அதற்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றில், துப்பாக்கி  ஏந்தி வந்த ஒருவர் அமெரிக்காவின் உவால்டேயில் உள்ள தொடக்கப்பள்ளி மீது தாக்குதல் நடத்தி னார். அந்தத் தாக்குதலில் 19 மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும் துப்பாக்கிக் குண்டு களுக்குப் பலியானார்கள்.  இந்த சம்பவங்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. ஆப்கானிஸ்தானத்தை விட அமெரிக்கா ஆபத்தான நாடாகிவிட்டது என்று அமெரிக்க மக்கள் கருத்துச் சொல்லத் தொடங்கினார்கள். இதற்கு முன்பு இருந்ததை விட நிலைமை மோச மாகத் தொடங்கியது. இதனால் துப்பாக்கிகள் விற்பனை மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்தது. அமெரிக்க நாடாளு மன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் துப்பாக்கிகள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான மசோதா  நிறைவேறியது. இந்த மசோதா செனட் அவையிலும்  நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் குடியரசுக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் செனட் அவையில் மசோதா நிறைவேறாது.

இதற்கிடையில் அமெரிக்காவின் பல்வேறு நகர மேயர்கள் ஒன்றாக அமர்ந்து பிரச்சனையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்திருக்கின்றனர்.  சுமார் 15 நகர மேயர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்ட விரோத துப்பாக்கிகளுக்கு எதிரான மேயர்கள்  மாநாடு என்று பெயரிட்டனர். இந்த மாநாட்டிற்குத்  தலைமையேற்ற நியூயார்க் நகர மேயர்,”லாபத்தை விட பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர நாங்கள்  முடிவு செய்துள்ளோம். தங்களால் முடிந்த அள வுக்கு எவ்வளவு பேர் கைகளில் துப்பாக்கிகளைக் கொடுக்க முடியும் என்று ஆயுத விற்பனை முத லாளிகள் பார்க்கிறார்கள். துப்பாக்கியின் வேலையே கொல்வதுதான். எதற்காக அது உரு வாக்கப்பட்டதோ, அதை அது செய்கிறது”என்றார். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 15 நகரங்களில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. இதில் 12 நகரங்களில் நடந்த பல்வேறு சோதனைகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் சிக்கின. துப்பாக்கிச் சூடுகளில் பலியாகிறவர்கள் பெரும்பாலும் கறுப்பினத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது சிறுபான்மையினத்தவராகவோ இருக்கிறார்கள். பாதிக்கப்படும் சமூகத்தி னர் முன்னேற வேண்டுமானால் இந்த பாதுகாப்பி ன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மேயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், துப்பாக்கிச்சூடு கலாச்சாரத்திற்கு ஆயுத உற்பத்தியாளர்களைப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல மேயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.