world

img

அமெரிக்கத் தடைகளுக்கு எதிராக நின்ற நல்லுறவு

பெல்கிரேடு, ஜூன் 22- கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள மனித குல விரோத அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக நின்றதற்காக ஐரோப்பிய நாடான செர்பியாவுக்கு பாராட்டுதலும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக கியூபாவின் ஜனாதிபதி மிகு வேல் டியாஸ்-கானெல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கான தனது பயணத்தின் ஒருபகுதியாக செர்பியா வுக்கும் டியாஸ்-கானெல் சென்றடைந்தார். செர்பியாவுடனான உறவைப் பலப்படுத் தும் நோக்கத்தில் இந்தப் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் உசிச்சைச் சந்தித்த அவர், “தொடர்ந்து தரப்படும் ஆதரவு மற்றும் பெரும் உத விக்காக செர்பிய அரசு மற்றும் மக்க ளுக்கு கியூபாவின் சார்பாக  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். இதை கூட்டு செய்தி யாளர் சந்திப்பிலும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். அமெரிக்காவின் சட்டவிரோதத் தடை களால் கியூபா சந்தித்து வரும் இன்னல் களைப் பட்டியலிட்ட டியாஸ்-கானெல், செர்பியா உள்ளிட்ட நாடுகள் தரும் ஆதரவு மிகவும் முக்கியமானது என்றார். 1961 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் பயணம் மேற்கொண்டு இருநாடுகளுக்கும் இடை யில் உறவை வலுவாக உருவாக்கிய பிடல் காஸ்ட்ரோவையும் அவர் நினைவு கூர்ந்தார். அப்போது யூகோஸ்லேவியாவின் ஜனாதி பதியாக இருந்த டிட்டோ, கியூபாவின் ஆதர வாளராக இருந்தார் என்றும் தெரிவித்தார். கொசோவாவை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கியூபா  ஒருபோதும் ஆதரிக்காது என்றும்,

அத்த கைய கோரிக்கைக்கான நடவடிக்கை களைத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் கியூப ஜனாதிபதி மிகுவேல் டியாஸ்-கானெல் உறுதியளித்திருக்கிறார். செர்பிய நிலப்பரப்பின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்குத் தங்கள் வலுவான ஆதரவு தொடரும் என்றும், கொசோவா விவகாரத்தில் செர்பியா பக்கமே நிற்பதாக வும் அவர் தெரிவித்தார். செர்பியா ஜனாதிபதி அலெக்சாண்டர் உசிச் உடனான சந்திப்பின்போது, அனை த்துத் துறைகளிலும் செர்பியாவுடனான ஒத்துழைப்பைப் பலப்படுத்த கியூபா பெரும் ஆர்வமாக இருக்கிறது என்பதை டியாஸ்-கானெல் சுட்டிக்காட்டினார். எந்தெந்தத் துறைகளில் கூடுதல் ஒத்து ழைப்பை மேற்கொள்ள முடியும் என்பதைக் கண்டறிவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்த கூட்டங்களில் அந்தத் துறைகளில் இரு தரப்பு உடன்பாடுகள் எட்டுவதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெறும் என்று  பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளன. வாடிகன் நகரில் போப் மற்றும் இத்தாலியில் அந்நாட்டின் ஜனாதிபதி செர்ஜியோ மாட்டரெல்லா ஆகியோரைச் சந்தித்து விட்டு செர்பியா சென்றடைந்த டியாஸ்-கானெல், செர்பியாவின் ஜனாதி பதி அலெக்சாண்டர் உசிச்சைச் சந்தித்து விட்டு, பாரிசில் நடைபெற்று வரும் ஜி77+சீனா உச்சி மாநாட்டில் கலந்து கொண் டார். உலக அளவிலான நிதிவிவகாரங் களுக்கான உடன்பாட்டை எட்டும் முயற்சி யில் இந்த மாநாடு நடக்கிறது. பெரும்பா லான நாடுகளுடனான இருதரப்பு உறவு களை புதுப்பிக்க இந்த மாநாட்டை கியூபா பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறது.