world

img

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி?  

அமெரிக்காவில் பஃபேலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்ல் 10 பேர் கொல்லப்பட்டனர்.  

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.  சனிக்கிழமை இந்த கட்டிடத்திற்குள் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

18 வயதான இளைஞரால், கொல்லப்பட்டவர்களில் 8 பேர் கறுப்பினத்தவர்கள், 2 பேர் வெள்ளையர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இந்த விசாரணை அதன் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், அதிகாரிகள் இன்னும் தெளிவான நோக்கத்தைக் கண்டறியவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பாட்டுள்ளது. அதே வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு இனவெறியின் அடிப்படையில் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். 

;