world

அண்டார்டிகாவில் கடந்த 25 ஆண்டுகளில் நிலத்தின் மீது படிந்துள்ள நிரந்தர பனி

அண்டார்டிகாவில் கடந்த 25 ஆண்டுகளில் நிலத்தின் மீது படிந்துள்ள நிரந்தர பனி அடுக்குகளில்  40 சதவீத
வரை உருகி விட்டதாக  ஐரோப்பிய விண்வெளி ஆய்வு
நிறுவன விஞ்ஞானிகள் அபாய ஒலி எழுப்பியுள்ளனர்.
‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி 1997 முதல் 2021 வரை அண்டார்டிகாவில்  162 பனி அடுக்குகளில்  71 அடுக்குகள் உருகிவிட்டன.இதில்  
68 அடுக்குகள்  குறிப்பிடத்தக்க அளவு உருகிவிட்டன  எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது சாதாரண நிகழ்வு அல்ல என்றும் , மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் அண்டார்டிகாவை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு  ஆதாரம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
“பெரும்பாலான பனி அடுக்குகள்  விரைவாக  குறுகிய காலத்தில் உருகி, பின்னர் மெதுவாக மீண்டும் பனிபொழிவால் புதிய பனி அடுக்குகள் உருவாகும். தற்போது இந்த பனி அடுக்குகளின் மீண்டும் உருவாக எந்த அறிகுறியும் இல்லாமல், தொடர்ந்து உருகி  வருவதை 
நாங்கள் காண்கிறோம்,” என முன்னணி எழுத்தாளர் பெஞ்சமின் டேவிசன் கூறினார்.
இதே காலகட்டத்தில் லீட்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட  ஆராய்ச்சியில்  உருகிய பனி அடுக்கு களில் 29 அடுக்குகள் மீண்டும் உருவாகிவிட்டதாகவும், 62  அடுக்குகள் மீண்டும் உருவாக்கவில்லை   என்றும் கண்டறிந்துள்ளனர்.
25 வருட காலப்பகுதியில் 48 பனி அடுக்குகள்  30 சதவீதத்திற்கும் அதிகமாக தனது அளவை இழந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த பனி
அடுக்குகள் உருகுவதற்கு அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் கடல் நீரோட்டங்கள் மற்றும் காற்று, பனிப்  பாறைகளின் கீழ் நீரின் வெப்பநிலை உயர்தல் ஆகியவை
யும் ஒரு காரணமாக உள்ளது.