மக்களிடையே ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதி, உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக ரத்த தானம் செய்வோர் தினம் முதன்முதலில் 2004-ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் கொண்டாடப்பட்டது. பின்னர், 2005-ஆம் ஆண்டு 58ஆவது உலக சுகாதார சபை கூட்டத்தின் போது உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் இந்த தினத்தை கடைபிடிக்க முடிவெடுத்தன. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதி, உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
."ரத்தம் தானம் செய்யுங்கள், பிளாஸ்மா தானம் செய்யுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்" என்பது இந்தாண்டின் மையக்கருத்தாகும்.