ஜெருசலேம்
உலகை 2 ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தானும் ஓய்வு எடுக்காமல் மக்களையும் ஓய்வு எடுக்க விடாமல் ஒரு முடிவு இல்லாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக மனிதர்கள் ஏற்கெனெவே உள்ள இணை நோயோடு தான் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவார்கள். கொரோனாவோடு வேறு எந்த நோயும் சேர்த்து தாக்காது. ஆனால் இஸ்ரேல் நாட்டில் புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்நாட்டின் ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனாவோடு ப்ளூ காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை ப்ளூரோனா என அழைத்து வருகின்றனர். உலகிற்கு இந்த சம்பவம் அதிர்ச்சியானது என்பதால் இஸ்ரேல் நாடு பெண்ணின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என இதுவரை தகவல் வெளியிடவில்லை.