world

img

அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்திய சீன ஜனாதிபதி!

ஜி-20 மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோவிடன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்பட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாட்டு இந்தோனேசியாவில் நடந்து வருகின்றது. இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோவும் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களை கனடா தரப்பிலிருந்து பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்டன. இந்த நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோவிடன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், "இது தவறு; முதலில் நிபந்தனைகளை உருவாக்குங்கள்" என சீன ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்தார்.