world

img

5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையில், இந்தியாவில் பல பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலமாக குறைந்தபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என எச்சரித்துள்ளது.
அத்துடன் அடுத்த 5 நாட்களுக்கு வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலை பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தாக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இருப்பினும் கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டி இருக்கும் தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.