ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரஸல்ஸ், பெர்லின், லண்டன் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது ஆகிய சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவை வழங்கும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று விசாரணை தீவிரமாகியுள்ளது.