ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வடகொரியா பயணம்
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் செர்ஜி ஷோய்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்க இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாகச் சென்றுள்ளார். வட கொரியா ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும். ஈரான்-இஸ்ரேலுக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இவரது பயணம் கவனம் பெற்றுள்ளது. இந்த இரண்டாவது பயணத்தில் அவர் புடினின் முக்கிய வழிகாட்டுதல்கள் குறித்து பேச சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஈரான் செய்தி நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் ஈரான் மீது நடத்தும் தாக்குதலில் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியது. நிறுவனத்தில் நேரலை நிகழ்வு நடந்து கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 3 நபர்கள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காணொலி வெளியாகி பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செய்தியாளர்கள், செய்தி நிறுவனங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் சர்வதேச போர்க் குற்றமாகும். இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து உளவுத் துறைக்கு முதல் பெண் தலைவர்
இங்கிலாந்து உளவுத் துறையான எம்ஐ6 க்கு தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவெலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனமான எம்ஐ6 1909 இல் நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் ரகசியமாக இயங்கும் இவ்வமைப்பானது பயங்கரவாதத்திற்கு உதவி செய்து வளர்த்து விடுவது, அதன் மூலமாக தங்களுக்கு அடிபணியாத அரசுகளின் ஆட்சியை கவிழ்ப்பது என பல வேலைகளையும் அரங்கேற்றியுள்ளது.
டிச.4 ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு எதிரான தினம்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று ஒருதலைப்பட்சமான வற்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவிக்க ஐநா பொது அவை தீர்மானத்தை நிறைவேற்றியது. வளரும் நாடுகளை தடுக்கும் வகையிலான சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனத்திற்கு இணங்காத எந்தவொரு ஒருதலைப்பட்ச பொருளாதார, நிதி, வர்த்தக நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதையோ, அறிவிப்பதையோ, பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு இந்த தீர்மானம் உலக நாடுகளை வலியுறுத்துகிறது.
போயிங் விமானங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் வங்கதேசம்
இந்தியாவில் நடைபெற்ற ஏர் இந்தியா விபத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தின் தேசிய விமான நிறுவனமான பிமான் வங்கதேஷ் ஏர்லைன்ஸ் இயக்குகிற போயிங் விமானங்களின் தரத்தை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது வங்கதேச அரசு. “பிமான் அனைத்து போயிங்-787 ட்ரீம்லைனர் விமானங்களின் முக்கியமான அமைப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்குத் தேவையான சோதனைகளை நடத்தும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது” என அந்தநிறுவனத்தின் மேலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் அச்சமூட்டும் ராணுவ நகர்வுகள்
யூயார்க், ஜூன் 17- போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பலை இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெ ரிக்கா நகர்த்தி வருவதாக சர்வதேச செய்தி நிறு வனங்கள் தெரிவித்துள்ளன. போர் விமானங்கள் வான்வெளியில் பறந்து கொண்டு இருக்கும் போதே எரிபொருள் நிரப்பும் திறன் கொண்ட பல விமானங்களை ஐரோப்பிய பகுதிக்கு நகர்த்தியுள்ளது அமெரிக்க ராணுவம். அதே போல அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான நிமிட்ஸ் மத்திய கிழக்கு நோக்கிச் சென்று கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இக்கப்பல் 5,000 ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் உட்பட 60 க்கும் மேற்பட்ட விமானங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகும். தாக்குவதற்கு நாடாளுமன்ற அனுமதியை பெற வேண்டும் இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்க ராணுவத்தை தாக்க சொல்லி உத்தரவிடுவதற்கு முன்பு முதலில் நாடாளு மன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என ஒரு மசோதாவை ஜனநாயக கட்சியின் வர்ஜீனியா செனட்டர் டிம் கைன் அறிமுகப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க அரசுக்கு அமெரிக்கா வில் உள்ள ஆயுத முதலாளிகள், இஸ்ரேல் ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் சார்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்கும் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இந்த மசோதாவை அவர் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதா வியட்நாம் போரின் போது நிறைவேற்றப்பட்ட 1973 ஆம் ஆண்டின் போர் அதிகாரத் தீர்மானத்தை செயல்படுத்தும். அதா வது ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தி ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடு வதையும் ராணுவ விரோத செயல்களில் ஈடுபடு வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வியட்நாம் போருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் அதிகாரத்தின் மூலமாக நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் போர்களை நடத்தி யுள்ளதும் குறிப்பிடத்தக்கது.