world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரானின் பொருளாதார ஆதாரங்கள்  மீது இஸ்ரேல் தாக்குகிறது – கத்தார் 

ஈரானின் பொருளாதார ஆதாரங்கள் மீது இஸ்ரேல் குறிவைத்து தாக்குகிறது. இது மிகவும்  ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது எச்சரித்துள்ளார். நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பென் உடன் தொலைபேசியில் உரையாடிய போது தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் சமாதான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. முழு பிராந்தியத்தையும் ஒரு போருக்குள் இழுக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார். 

ஆயிரத்துக்கும் மேலான பள்ளிகள் கட்டிய ஆப்கன் அரசு

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் கல்வி அமைச்சகம் கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1,100 க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களை கட்டியுள்ளது என்று அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி மட்டுமின்றி, உதவி அமைப்புகளிடம் பெறப்பட்ட நிதி மூலமாக இக்கட்டடங்கள் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கைப் பேரழிவுகள் மற்றும் போர்களால் சேதமடைந்த சுமார் 3,000 பள்ளிகள்  மீண்டும் கட்டப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

பாலஸ்தீன ஆதரவாளர்களை கண்டிக்கும் இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடியவர்களை அந்நாட்டு பிரதமர்  ஸ்டார்மர் கண்டித்துள்ளார். இங்கிலாந்து ராணுவம் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு தொடர்ந்து உதவி வரும் நிலையில் அந்நாட்டின் விமானப்படை (RAF) தளத்தை முற்றுகையிட்டு பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் சிலர் தடுப்புகளை தாண்டி விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த அவர் அவர்களை கண்டித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

வலுவான பதிலடி கொடுக்கப்படும்:  ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை 

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஈரான் ‘இன்னும் வலுவான’ பதிலடி கொடுக்கும் என்று ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் உறுதித்தன்மையைப் பின்பற்றி வருகிறோம். இந்த தாக்குதல் நிற்க வேண்டுமானால் இஸ்ரேல் தனது பயங்கரவாதத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர உறுதியான உத்தரவாதத்தை தர வேண்டும். அதுதான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார். 

வலதுசாரி ஆட்சியால்  அர்ஜெண்டினாவில் வேலையின்மை 

2025 முதல் காலாண்டில் அர்ஜெண்டினா வின் வேலையின்மை விகிதம் 0.2 சதவீத புள்ளிகள் அதிகரித்து 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் வியாழக்கிழமையன்று  தெரிவித்துள்ளது. அமெரிக்க ஆதரவாளரான அந்நாட்டு ஜனாதிபதி மிலேய் அந்நாட்டை மிக தீவிரமான பொருளாதார நெருக்கடியில் தள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஈரானுக்கு ஆதரவாக கைகோர்க்கும் சீனா- ரஷ்யா! அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?

பெய்ஜிங் /மாஸ்கோ, ஜூன் 20 - இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே யான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாக இணைந்து அறிக்கை விடுத்துள்ளன.  இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஈரானை நோக்கி நகர்த்தி வருகிறது. மேலும் மத்திய கிழக்கில் உள்ள அதன் ராணுவத் தளங்களையும் தயார்ப்படுத்தி வருகிறது.  மேலும் டிரம்ப்பும் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக சீனாவும் ரஷ்யாவும் வெளியிட்டுள்ள அறிக்கை யானது ஈரான் தனியாக இல்லை என அமெரிக்கா வுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா என கேள்வி எழுந்துள்ளது. புதன்கிழமையன்று சீன, ரஷ்ய ஜனாதிபதி கள் இருவரும் ஒரு மணி நேரம் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிறகு, ரஷ்ய தரப்பில் இருந்து கூட்டறிக்கை தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் வியாழனன்று இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் குறித்தான முடிவு  எடுக்கப்படும் என டிரம்ப் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்த மோதலில் ஒப்பீட்டளவில் ஈரானுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டு வரு கின்றன. என்றாலும் இஸ்ரேல் எதிர்பார்க்காத துல்லியத் தாக்குதலை ஈரான் அந்நாட்டுக்குள் நடத்தி வருகிறது.  இதனால் இஸ்ரேல் அதிர்ச்சியடைந்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ் செய்தியாளர்களிடம் கூறுகை யில், புடினும் ஜி ஜின்பிங்கும்  “ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேசச் சட்டத்தின்  விதிமுறைகளை மீறி வருகிற இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடு மையாக கண்டித்துள்ளனர். ஈரானின் அணு சக்தி திட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தாக்குதல்கள் தீர்வு இல்லை என்று இரு தலை வர்களும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அரசியல் மற்றும் ராஜீய ரீதியிலான வழிமுறைகள் மூலம் மட்டுமே தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த மோதலை நிறுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த புடின் தயாராக இருப்பதாக இரண்டா வது முறையாகத்  தெரிவித்துள்ளார். இதற்கு ஜி ஜின்பிங்கும் தனது ஆதரவை தெரிவித்துள்ள தாகவும் இஸ்ரேலும் அமெரிக்காவும் மோத லை முடிவுக்கு கொண்டுவரவும் சூழலை  தணிக்கவும் முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.