world

img

ஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழப்பு  

ஆப்கானிஸ்தான் மசூதியில் நேற்று தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.  

ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹில் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின்போது திடீரென குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.  மேலும் இதில் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.