மாஸ்கோ, ஜூலை 11- புதிய, புதிய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி தற்போது நடைபெற்று வரும் மோதலைத் தொடர அமெரிக்கா முயற்சிக்கிறது என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் தற்காப்புக்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்ற அமெரிக்காவின் கருத்து நம்பகத் தன்மையற்றது. டோன்பாஸ் பகுதியில் உள்ள பல நகரங்களை அழிக்கவே அவை பயன்படு கின்றன. மக்கள் குடியரசுகளாக அழைக்கப் படும் டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய இரண்டிலும் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன “ என்று கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “என்ன விலை கொடுத்தாவது இந்த நெருக்கடியை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா குறியாக உள்ளது.
அதற்காக புதிய, புதிய ராக்கெட் செலுத்தும் கருவிகள் உக்ரைனுக்கு அனுப்பப்படு கின்றன. வாஷிங்டன் அமைதியைக் கொண்டு வரவில்லை. மாறாக, உக்ரைன் ஆட்சியாளர் களை புதிய குற்றங்களைச் செய்யும் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு மேலும் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்ப அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதை ஒட்டியே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிக எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் வசதி கொண்ட நான்கு ஹிமார்ஸ் ராக்கெட் செலுத்தும் கருவிகள் உக்ரைனுக்கு வழங்கப்படுகின்றன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி செலுத்தப்படும் ராக்கெட்டுகள் நெருக்கடிக்குக் காரணமான டான்பாஸ் பகுதி களையே தாக்கி அழிக்கின்றன என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. அண்மையில் உக்ரைன் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றைச் சுட்டிக்காட்டும் அறிக்கை, “டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அப்பாவி மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறார்கள். அப்பகுதியின் அருகில் கூட ரஷ்ய ராணுவம் இல்லை” என்கிறது.