மெக்ஸிகோ சிட்டி, ஜூன் 3 - ஜூன் 2ம் தேதி நடைபெற்ற மெக்சிகோ ஜனாதிபதி தேர்தல் முடிவில் டாக்டர். கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி யாக வெற்றி பெற்றுள்ளார். மெக்சிகோவின் 200 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாவார். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இவர் விஞ்ஞானி யாகவும், அரசு ஊழியராகவும், நீண்டகால சமூக செயற் பாட்டாளராகவும் செயல்பட்டவர். மெக்ஸிகோவின் தேசிய மறுமலர்ச்சிக்கான இயக்கம்,மெக்ஸிகோ பசுமை சூழலியல் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவற்று டன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்த இவர் 58 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.