பிரேசிலில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
வடகிழக்கு பெர்னாம்புகோ மாநிலத்தின் தலைநகரான ரெசிஃப் சிட்டி மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, அலகோவாஸ் மாகாணத்தில் கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ரெசிஃப் சிட்டியில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், கமராகிபேவில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.