4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்கும் 33ஆவது ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 39 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவிலிருந்து 117 வீரர்களைக் கொண்ட அணி விளையாடவுள்ளது.