ஜகார்த்தா,நவ.2- நவம்பர் மாதத்தை பாலஸ்தீன ஒற்றுமை மாதமாக கடைப்பிடிப்ப தாக இந்தோனேசியா அறி வித்துள்ளது. “இந்தோனேசியா எப்போதும் பாலஸ்தீன ஆதரவுடன் நிற்கும்” என இந்தோனேசியா கூறி யுள்ளது.
இந்தோனேசியா பல ஆண்டு களாக உறுதியான பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்து வருகிறது. மேலும் அந்நாட்டு மக்க ளும் தங்கள் சொந்த அரசியலமைப் பின் மூலம் தங்கள் நாட்டிற்கு பாலஸ் தீன ஆதரவு நிலைப்பாட்டில் உறுதி யுடன் இருக்க அழுத்தம் கொடுக்கின் றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந் தோனேசியா, இஸ்ரேலுடன் அரசு ரீதி யிலான உறவுகளைக் கொண்டிருக்க வில்லை. மேலும் பாலஸ்தீனப் பகுதி களின் மீதான இஸ்ரேலின் ஆக்கிர மிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் 1967 க்கு முந்தைய எல்லைகளை அடிப்படை யாகக் கொண்டு இரு நாடுகள் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது இந்தோனேசிய அரசு.
இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு என்பதையும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு காட்டு மிராண்டித்தனமானது என்பதையும் இந்தோனேசியர்கள் மற்றும் உல கெங்கிலும் உள்ள மக்களால் காட்டப் படும் ஒற்றுமை காட்டுகிறது என்று இந்தோனேசியா கூறியுள்ளது.