world

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதலா?

நியூயார்க், அக். 3 - மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியும், பாலஸ்தீன ஆதரவுத் தலைவர்களை படுகொலை செய்தும் இஸ்ரேல் நடத்தி வரும் அடாவடிக்கு செவ்வாய்க்கிழமை யன்று ஈரான் பதிலடி கொடுத்தது.

ஒரே நேரத்தில் 400 அதிநவீன பாலிஸ்டிக், ஹைப்பர்சானிக் ஏவுகணை களை ஏவி, இஸ்ரேலின் ராணுவத் தளங்களை சிதைத்தது.

இத்தாக்குதல்களை நடத்திய தற்காக ஈரான் கடுமையான விளைவு களை சந்திக்கும் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்தாலும், அவ்வாறு மீண்டும் தாக்கினால் இஸ்ரேலை அழித்து விடுவோம் என பதிலுக்கு ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், ஈரானில் உள்ள அணு சக்தி நிலையங்களை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி கசியவிடப்பட்டு வருகிறது. சொல்லப்போனால், ஈரானின் பதிலடிக்குப் பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட தனது கூட்டாளி நாடுகளுடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தியது. அதன்பிறகே இந்த செய்திகள் வெளியாகின.

ஈரானை மிரட்டிப்பார்க்கும் விதமாக  அமெரிக்காவும் சேர்ந்து தான் இவ்வாறு ஒரு நாசகர திட்டத்தை போட்டுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல்  நடத்த இஸ்ரேலுக்கு முழு அனுமதி யையும் அமெரிக்கா கொடுத்துள்ள தாகவும், எனினும், ஈரானின் அணு சக்தி நிலையங்களின் மீது தாக்கு தலை நடத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பம்மாத்து காட்டியுள்ளார்.

“இஸ்ரேலுக்கு பதில் தாக்குதல் நடத்த உரிமை உண்டு, எனினும் வரை முறை படி தாக்குதல் நடத்த வேண்டும்”  என்றும் பைடன் நல்லவர் வேடம் போட்டுள்ளார்.

ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் புதன்கிழமையன்று பேச்சுவார்த்தை  நடத்தியதாகவும் ஈரான் மீது மேலும் அதிக பொருளாதாரத் தடைகள் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான உத்தரவுகள் அமெரிக்க தரப்பில் இருந்து வரும் எனவும் வழக்கம்போல மிரட்டியுள்ளார்.