world

img

தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

அரியலூர், டிச.22- மருத்துவ சேவை குறைபாடு காரணமாக நோயாளிக்கு ரூ.2.31 லட்சம் வழங்க வேண்டு மென தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர்  குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. செந்துறை அருகேயுள்ள குழுமூரைச் சேர்ந்த தம்பதி முத்துசாமி-மகேஸ்வரி (35).  இத்தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டு களாக குழந்தை இல்லை. இதனால் திருச்சி  தில்லை நகர் 11 ஆவது குறுக்குச் சாலையி லுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் (ஜனனி பெசலிஸ்ட் சென்டர்) மருத்துவர் சித்ராவிடம், கடந்த 2002 செப்டம்பர் முதல் சிகிச்சை பெறத் தொடங்கினர். சிகிச்சையின் போது கணவன்-மனைவி இருவருக்கும் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இருந்த போதிலும் இருவரின் குறை பாட்டை களையாமல், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இறுதியில் மகேஸ்வரியின் கருத்தரிப்பு சிகிச்சை தோல்வி யில் முடிந்தது. அதன்பிறகு கணவன்-மனைவி  இருவரும் சிகிச்சைக்கு செல்வதை நிறுத்திக்  கொண்டனர். இந்நிலையில் மகேஸ்வரி, தங்களுக்கு குழந்தை பெற வாய்ப்பில்லை என்பது நன்கு  தெரிந்திருந்தும், அறிவியல் ரீதியாக கருத்த ரிப்பதற்கு உண்டான மாற்று முறைகளை தங்களிடம் தெரிவிக்கவில்லை. அதனால் மருத்துவர் சித்ரா நஷ்ட ஈடு வழங்க வேண்டும்  என்று கோரி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 10.7.2023 அன்று வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தமிழச்செல்வி,  உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர்  கொண்ட அமர்வு,  “மகப்பேறு மருத்துவத்  துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமடைந்த மருத்துவ முறைகள் பற்றி எடுத்துக் கூறாதது,  போதிய தகவல் தெரிவிக்காமல் மகேஸ் வரிக்கு சிகிச்சை அளித்தது ஆகியவற்றை மருத்துவ சேவை குறைபாடுகளாக கருதி சிகிச் சைக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1,61,160-ஐ  மகேஸ்வரிடம் திருப்பித் தர வேண்டும். மேலும் அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.60,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆகிய வற்றை ஒரு மாதத்துக்குள் மருத்துவர் சித்ரா தர வேண்டும்” என தீர்ப்பளித்தது.