ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
டோக்கியோ, ஜன.9- கடந்த ஜனவரி 1 அன்று ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அள வில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சாலைகள் பெயர்ந்து பெரி தும் சேதமடைந்தன. நூற் றுக்கும் மேற்பட்ட கட்ட டங்கள் இடிந்து விழுந்தன. மேலும், வஜிமா துறைமுக மும் பெரும் பாதிப்புக்குள் ளானது.
இந்நிலையில் ஜப்பா னின் மேற்கு கடற்கரை பகு தியான ஹோன்ஷிகோ என்ற இடத்தில் செவ்வாயன்றும் (ஜன.9) நிலநடுக்கம் ஏற் பட்டது. இது 6 ரிக்டர் என்ற அளவில் பதிவானது. இத னால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்த னர்.
ஜன.11 முதல் மழை குறையும்
சென்னை, ஜன.9- ஜனவரி 11 முதல் மழை யளவு படிப்படியாக குறை யும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
“கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜன வரி மாதத்திலும் தொடர் கிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பதிவாகி வருகிறது. தென் மாவட்டங்க ளில் பெய்து வரும் மழை, மேற்கு நோக்கி நகரும். தூத் துக்குடி, நெல்லை, விருது நகர், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள் ளது. வரும் வியாழன் முதல் மழை அளவு படிப்படியாக குறைந்து வறண்ட வானிலை நிலவும்” என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.