world

வரலாறு காணாத பஞ்சம், மக்கள் இடப்பெயர்வை உருவாக்கும் சூடான் உள்நாட்டுப் போர்

கார்டூம், நவ.5- சூடான் நாட்டில் அதிவிரைவுப்படை, அந்நாட்டு ராணுவத்துடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் உள்நாட்டுப் போரின் கார ணமாக சூடான் மக்கள் வரலாறு காணாத பஞ் சத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.  மேலும் லட்சக்க ணக்கான மக்களை கட்டாயமான முறையில் அகதி களாக வெளியேற்றி வருகின்றது. 

சூடானின் மொத்த கோதுமை உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக நைல் நதி நீர் பாயும் கெசிரா மாநிலத்தில் விளைகிறது. இம்மாநிலத்தில் உள்ள  நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களை அதி விரைவுப்படை சுட்டுப்படுகொலை செய்ததுடன், அவர்களது உட மைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. 

அக்டோபர் 20 முதல் கெசிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து மேலும் 1,35,000 மக் களை அதிவிரைவுப்படை தாக்குதல் நடத்தி  கட்டா யமாக வெளியேற வேண்டுமென மிரட்டி வரு கின்றது என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வ தேச அமைப்பு  நவம்பர் 1 அன்று தெரிவித்தது.

இதுமட்டுமின்றி கெசிரா மாநிலத்தின் முக்கிய சந்தை நகரங்களாகவும் மாநிலம் முழுவதுமான உணவுப் பொருட்கள் விநியோகத்தின் மைய நக ரங்களாகவும் உள்ள ருஃபா, தாம்பூல் ஆகியவை மீது கடுமையான தாக்குதலை நடத்தி நூற்றுக் கணக்கான மக்களை படுகொலை செய்துள் ளது. மேலும் நகரங்களை சுற்றியுள்ள பல கிராமங் கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. நூற்றுக்கணக் கான மக்களை சிறைப் பிடித்து வைத்துள்ளது. அவர்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி அந்நாட்டு ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயற்சித்து வருகின்றது. மேலும் அம்மாநி லம் முழுவதும் தாக்குதலை விரிவுபடுத்தி வரு கின்றது. 

அதிகாரப்போட்டியின் காரணமாக இரண்டு படைகளுக்கு இடையே 2023 முதல் நடந்து வரும் இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள்  நாடுமுழுவ தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அந்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் அதிவிரைவுப் படை அழித்து விட்டது.  பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, பாலியல் வன்கொடுமை களுக்கு பயந்து பெண்கள் தற்கொலை செய்து கொள்வது என்ற கொடூரமான நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

விவசாயிகள் நிலங்களுக்கு சென்று விவசா யம் செய்ய முடியாத சூழலில் உள்ளனர். ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களையும் அவை அழித்து விட்டன. மேலும் 1000 க்கும் அதிகமான விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

பசியில் வாடும் மக்களுக்கு ஐ.நா. நிவாரண வாகனங்களில் வரும் குறைந்தபட்ச உணவுப் பொருட்களான கிழங்கு மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் அதிவிரைவுப் படை கொள்ளை யடித்துச் சென்று விடுகின்றது.

இத்தகைய சூழலால் நவீன வரலாற்றில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினி மற்றும் பஞ் சத்தை எதிர்கொண்டு வரும் நாடாக சூடான் மாற்றப் பட்டுள்ளது. இந்த பஞ்சம் ஏற்கெனவே உள்நாட்டிற் குள்  இடம் பெயர்ந்துள்ள 1.1 கோடி மக்கள் உட்பட 2.5 கோடிக்கும் அதிகமான மக்களை கடுமையாக பாதித்துள்ளது. சூடானின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வாழ வழியின்றி இடம் பெயர்ந்துள்ள னர். இதில் 97 சதவீதத்தினர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.