world

img

புதிய யுகத்தில் சீனாவின் சட்ட ஒழுங்கு அமைப்புமுறை கட்டுமானம்

பெய்ஜிங், அக். 19 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான 3ஆவது செய்தியாளர் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. அதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி யின் அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணை யத்தின் துணைப் பொதுச் செயலாளர் யின்பய் பேசினார். தற்போது, சீனாவில்  சட்டப்படியான ஆட்சி முறை அடிப்படையில் உருவெடுக்கப்பட்டுள்ளது. சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சட்ட ஒழுங்கு அமைப்புமுறையின் கட்டுமானம் வேகமாக்கப்பட்டு வருகிறது என்றார். தகவலின்படி, கடந்த செப்டம்பர் இறுதி வரை, சீனாவின் நடைமுறையிலுள்ள பயனுள்ள சட்டங்களின் எண்ணிக்கை 293. கடந்த 10 ஆண்டுகளில், கட்சியில் 159 சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன அல்லது திருத்தப்பட்டுள்ளன. மேலும், சீனச் சட்ட நீதி அமைச்சகத்தின் துணைத் தலைவர் ஸுவோலீ இக்கூட்டத்தில் கூறுகையில், தேசிய பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம், பொதுச் சுகாதாரம், உயிரின நாகரிகம், வெளிநாட்டு விவகாரங்களுடன் தொடர்புடைய சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சட்டமியற்றல் பணியைச் சீனா வலுப்படுத்தி, புதிய யுகத்தில் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்குப் பொருத்தமற்ற சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் திருத்தவுள்ளது அல்லது நீக்கவுள்ளது என்றார்.

தலைமைக் குழு கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் தலைமைக் குழுவின் 2ஆவது  கூட்டம் திங்களன்று பிற்பகல் மக்கள் மாம ன்றத்தில் நடைபெற்றது. தோழர் ஜி ஜின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்தியக் குழுவின் அறிக்கை பற்றிய வரைவுத் தீர்மானம், ஒழுங்கு பரிசோதனைக்கான 19ஆவது மத்திய ஆணையத்தின் பணி யறிக்கை பற்றிய வரைவுத் தீர்மானம், சீனக்  கம்யூனிஸ்ட் கட்சி சாசனத்தின் திருத்தம் பற்றிய வரைவுத் தீர்மானம் ஆகியவை விவா தத்துக்காக பல்வேறு பிரதிநிதிக் குழுக்களுக்கு வழங்கப்படுவதென இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 20ஆவது மத்தியக் குழுவின் உறுப்பினர் மற்றும் மாற்று உறுப்பினர், ஒழுங்கு பரிசோத னைக்கான மத்திய ஆணையத்தின் வேட்பாளர் ஆகியோரின் பெயர் பட்டியல் இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பல்வேறு பிரதிநிதிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரதிநிதிக் குழுக்களின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு, இம்மாநாட்டுக்கான தேர்தல் முறையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சீன பாணி நவீனமயமாக்கம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான குவாங்சி பிரதிநிதிக் குழுவின் விவாதத்தில் ஜி ஜின்பிங் ஞாயி றன்று கலந்து கொண்டார். அப்போது, சீனப்  பாணி நவீனமயமாக்கம், சீனாவின் நிலைமைக்குப் பொருந்தியது என்றார். மேலும், புதிய யுகத்தில், சீன பாணி நவீனமயமாக்கத்தை கட்சி வெற்றிகரமாக முன்னேற்றி விரிவுபடுத்தியுள்ளது. கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் உருவாக்கப்படும் முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவது தற்போதைய மிக முக்கியக் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உயர்தர வளர்ச்சித் திட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில், உயர்தர வளர்ச்சியே, நவீன சோஷலிச நாட்டின் பன்முகக் கட்டுமானத்தில் முதன்மைப் பணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெய்ஜிங், தியன்ஜின், ஹேபெய் உள்ளிட்ட 7 பிரதிநிதிக் குழுக்களின் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் இம்மாநாட்டுக்கான அறிக்கையைக் கற்றுக் கொண்டு விவாதம் நடத்திய நிலைமை பற்றி அறிமுகம் செய்தனர். அதோடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அவர்களின் உரைகளில் உயர்தர வளர்ச்சி என்பது முக்கியமான அம்சமாகும். பெய்ஜிங் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், புதுப்பிக்க முடியாத உற்பத்திக்கான ஒதுக்கீட்டைக் குறைக்கவும், புத்தாக்கத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வேண்டும். ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான பெய்ஜிங்கின் நிதி ஒதுக்கீடு 6.53 விழுக்காட்டுடன், சீனாவின் முன்னணியில் இருப்பதுடன், பல வளர்ந்த நாடுகளின் நிலையையும் தாண்டியுள்ளது என்று கூறினார். ஜீலின் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், அடுத்த கட்டத்தில் ஜீலின் தனது வேளாண்துறையின் சிறப்பான மேன்மைகளைப் பயன்படுத்தி, தகவல், எண்முறை மற்றும் நுண்ணறிவு மயமாக்க கட்டு மானத்தை விரைவுபடுத்தும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதில் மேலும் பெரும் பங்காற்றும் விதம், தானிய உற்பத்தித் திறனையும் முக்கிய வேளாண் பொருட்களின் வினியோகத்தையும் தொடர்ந்து உயர்த்தி வரும் என்று தெரிவித்தார்.