ஸ்டிராஸ்பர்க், டிச.7- கியூபா மீதான அமெரிக்காவின் மனிதத் தன்மையற்ற பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளனர். பல்வேறு பிரச்சனைகளில் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் கருத்துக்களை கேட்டறி வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாக ஐரோப் பிய நாடாளுமன்றம் இருந்து வருகிறது. 705 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளிலி ருந்து நேரடியாகத் தேர்வு செய்யப்படுகிறார் கள். தற்போது 9ஆவது நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அந்த நாடாளுமன்றத் தின் மனுக்கள் குழு தற்போது உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. இந்த மனுக்கள் குழு முன்பாகத்தான் பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை விலக்கக்கோரும் மனுவும் அக்குழுவிற்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் தடைகளுக்கு எதிரான தீர்மா னம் வரும்போது விரல் விட்டு எண்ணும் அளவில் கூட நாடுகள் அமெரிக்காவின் பக்கம் நிற்கவில்லை. ஓரிரண்டு நாடுகளைத் தவிர அத்தனை நாடுக ளும் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுத்தன
ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வலதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. கியூபாவுக்கு எதிராக அங்கு குரல் கள் எழுந்தன. மனுக்கள் குழுவின் விவாதத்தி லும் அவர்கள் பொருளாதாரத் தடைகளை நியா யப்படுத்திப் பேசினர். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இடதுசாரி உறுப்பினர்கள், குறிப்பாக கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு நாட்டின் குரல் வளையை நெரிப்பது மனித குலத்துக்கே எதிரா னது என்று அவர்கள் குரல் எழுப்பினர். “தனது போராட்டத்தில் கியூபா தனியாக இல்லை. சொல்லப்போனால் அமெரிக்காதான் சர்வதேச சமூகத்தின் முன்பாகத் தனிமைப்படுத் தப்பட்டுள்ளது” என்று கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அக்கட்சி யின் உறுப்பினர்களில் ஒருவரான நிக்கோலோ அலவனோஸ், “ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கியூப மக்களின் போராட்டத்தை நாங்கள் உறுதி யாக ஆதரிக்கிறோம். ஐரோப்பிய யூனியன் மற்றும் வலதுசாரி உறுப்பினர்களின் பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியத் தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
வலதுசாரிகளுக்கு எரிச்சல்
கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி உறுப்பினர்களின் ஆதரவுக்குரல் வலதுசாரி உறுப்பினர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது. ஐரோப்பிய மக்கள் கட்சி என்ற பெயரில் ஒருங் கிணைக்கப்பட்டுள்ள இந்த உறுப்பினர்கள் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் இருக்கிறார் கள். கம்யூனிசப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் இடமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தைப் பயன் படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற அவர்களின் குரலுக்கு இடதுசாரிகள் பதிலடி தந்தனர். கம்யூ னிச எதிர்ப்புத் தளமாக ஐரோப்பிய நாடாளுமன் றத்தை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்ற பதில் வலதுசாரிகளைத் திணறச் செய்தது. அடிப்படைச் சேவைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட் டவை பற்றாக்குறையாக உள்ளன. அமெரிக்கா வின் பொருளாதாரத் தடைகள் இதற்குக் கார ணமாக உள்ளது. இந்தத் தடைகளால் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்கள் கியூ பாவுக்கு தங்கள் பொருட்களை அனுப்ப முடி யாத நிலை இருக்கிறது. மனித உரிமைகள் மீறப் படுகின்றன என்ற பொய்ப் பிரச்சாரத்தை இதற்கு மேலும் அனுமதிக்கக்கூடாது என்றும் இடதுசாரி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.