ஒட்டாவா, ஜன.29- கனடாவின் நாடாளுமன்ற தேர்தல்களில் இந்தியா தலையீடு செய்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. கனடா நீதிபதி மேரி-ஜோஸ் ஹோக் தலைமையிலான குழு, கனடாவின் கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் கனடாவின் தேர்தல்க ளில் வெளிநாட்டு தலையீடு செய்யும் இரண்டா வது முக்கியமான நாடு இந்தியா எனவும் சீனா முதல் நாடு எனவும் அந்த அறிக்கையில் குறிப் பிட்டுள்ளனர். இந்தியா சீனா மட்டுமின்றி ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக வும் இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய அரசு, கனடாவில் உள்ள சட்ட விரோத காலிஸ்தான் ஆதரவாளர்களையும் சட்டப்பூர்வமாக குடியேறியுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறுகிறது. இந்தியா, தனது தூதரக அதிகாரி கள் மற்றும் ரகசிய ஏஜெண்டுகள் மூலமாக இத்தகைய விரும்பத்தகாத செயல்களைச் செய் கின்றது எனவும் அவ்வறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள அரசியல்வாதிகள் மீது தனது செல்வாக்கை அதிகரிக்க இந்திய ஆதரவு அரசியல்வாதிகள் மற்றும் பதவியில் இருக் கும் அரசியல்வாதிகளுக்கு இந்தியா ரகசிய மாகப் பணம் கொடுக்கிறது என கனடா உளவுத் துறை தகவல்கள் தெரிவிப்பதாகவும் குறிப் பிட்டுள்ளது. ஆனால் இத்தகைய குற்றச் சாட்டுக்களுக்கு அக்குழு போதிய ஆதாரங்க ளை வழங்கவில்லை. கனடா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்தாலும், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் தொடர்பாக இந்தியா எழுப்பும் பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் கவ லைகள் மீது கனடா அரசு போதுமான அளவு கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. சீக்கிய பிரிவினைவாதி நிஜார் படுகொலைக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே முரண் பாடு அதிகரிக்கத் துவங்கியது. மேலும் கனடாவில் ஏற்பட்ட உள்நாட்டு அரசி யல் அழுத்தம், சொந்த கட்சியில் ஆதரவின்மை காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார்.இந்நிலையில் வரும் மார்ச் மாதம் அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்திய அரசு தலையிட்டதாக அந்நாடு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்தச் சூழல் இரு நாடுகளுக்கும் இடையி லான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.