கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவாகியுள்ளது. மேலும் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தரப்பில் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த நிலநடுக்கம் 6.1ஆக பதிவாகி இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் உள்ள கிரீட் தீவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கிரீஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.