பிரஸ்ஸல்ஸ்,பிப்.2- ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தீவிர மாக அமல்படுத்தப்பட்ட விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிராக விவசா யிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்தி வருகின்றனர்.
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் என ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடுமையான பணவீக்கம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக ஐரோப்பா முழுவதும் விவசாயிகள், நுகர்வோர் என அனைவரும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
உற்பத்திக்கு அதிக செலவு செய்து இருப்பினும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்க இயலவில்லை.அதேவேளையில் விவ சாயிகளிடம் உற்பத்திப் பொருட்களை வாங்கி சந்தைப்படுத்தும் இடைத்தரகர்கள், கார்ப்பரேட்டுகள் மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.
தலைமூழ்காமல் தாக்குப்பிடிக்கவே...
உற்பத்திச் செலவைக் கூட ஈடு செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் எங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டோம்.தண்ணீ ரில் மூழ்காமல் தலையை வெளியே வைத்துக் கொள்ளப் போராடுவது போல, நாங்கள் அனைத்தையும் இழந்துவிடா மல் தாக்குப் பிடித்து வாழ்வதே பெரும் போராட்டமாக உள்ளது. ஆனால் எங்கள் விளைப் பொருட்கள் மூலம் இடைத்தர கர்களும் கார்ப்பரேட்டுகளும் தொடர்ந்து லாபத்தை அதிகரித்து வருகின்றனர் என கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயிகள் குழுக்களின் ஐக்கிய கூட்டமைப்பு தெரி வித்துள்ளது.
ஒரு விவசாயி தனது பண்ணையில் இருந்து மாட்டிறைச்சியோ அல்லது ஏதே னும் விவசாய விளைபொருளையோ ஒரு கிலோவிற்கு 3 யூரோக்களுக்கு (270.44 ரூ) விற்கிறார் என்றால் அதை கடைகளில் வாடிக்கையாளர் 10 யூரோக்கள் (901.48 ரூ) அல்லது அதற்கும் அதிகமாக செலுத்தி வாங்க வேண்டிய சூழல் நிலவி வருவதை யும் போராட்டத்தின் போது விவசாயிகள் தெரிவித்தனர். பால் உள்ளிட்ட சில அத்தி யாவசியப் பொருட்களின் விலை 30 சத வீதம் உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் இதே அளவுக்கு அதிகரிக்க வில்லையே ஏன் என பெல்ஜியம் தொழி லாளர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தாராளமயம் வந்த பிறகு குறைந்த பட்ச ஆதரவு விலை கூட, ஐரோப் பியா முழுவதும் ரத்து செய்யப்பட்டு விட்டது. விவசாயிகளின் உற்பத்தி முதல் வாடிக்கையாளர்கள் வரை ஒரு நேர் கோட்டு இணைப்புப் பாதையை உரு வாக்க அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விடுமுறை இன்றியும் இரவு நேரமும் என வாரம் முழுவதும் 60-80 மணிநே ரம் உழைக்கும் சூழலில் விவசாயிகளு க்கு மாதம் 1,500 அல்லது 1,000 க்கும் குறைவான யூரோ வருமானமே கிடைக்கின் றது. இது பெல்ஜியம் மக்களின் சராசரி வரு மானத்தை விட மிக குறைவு என பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் விவசாயக் கொள்கை
விவசாயிகள் மற்றும் மக்கள் மீதான இந்த சுரண்டலுக்கு அடிப்படைக் காரணம் ஐரோப்பா முழுவதும் அமலில் உள்ள பொது விவசாயக் கொள்கையாகும். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி யூரோக் கள் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த பணத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலம் வைத்திருப்பவர்களுக் கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மட்டுமே இந்த பணம் உதவுகிறது. இந்த நிதியில் இருந்து கொடுக்கப்படும் கிட்டத்தட்ட 80 சதவீத மானியம் வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள அதுவும் நேரடி உற்பத்தியில் ஈடு படாத கார்ப்பரேட்டுகளுக்கே செல்கிறது என பெல்ஜியம் தொழிலாளர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.