மாணவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இருமடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. 39,466 ரூபாயில் இருந்த (473 டாலர்) விசா கட்டணத்தை 89,113.44 ரூபாயாக (1,068 டாலர்) உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக குடியேற்றத்தை கட்டுப்படுத்த கட்டண உயர்வு கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
மியான்மர் வெள்ளம் : 2000 குடும்பங்கள் வெளியேற்றம்
மியான்மரின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக 2000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. கனமழை காரணமாக அங்குள்ள அய்யர்வாடி என்ற ஆற்றில் அளவுக்கதிகமாக அபாய அளவை விட நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனினும் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் சித்ரவதையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்
2023 ஆம் ஆண்டு கைது செய்யப் பட்ட காசாவின் அல்-ஷிபா மருத்துவமனை இயக்குனர் முகமது அபு செல்மி யா விடுதலை செய்யப்பட்டுள்ளார். காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் வீரர்கள் தங்கள் ராணுவத்தளங்களாக பயன்படுத்துவ தாக இஸ்ரேல் ராணுவம் ஆதாரமற்ற குற்றச் சாட்டில் அவரை கைது செய்தது. தன்னையும் பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் வீரர்கள் கொடூரமாக சித்ரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐ.நா.வலியுறுத்தல்
ஆயுத மோதல்களில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐ.நா பாதுகாப்பு அவை வலியுறுத்தல். உலகளவில் நடைபெறும் ஆயுத மோதலில் காணாமல் போகக் கூடிய குழந்தைகள் மற்றும் பொது மக்கள் எண் ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆயுத மோதல்களில் அப்பாவி மக்கள் மீதான பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரயில் பாதை மூலம் அதிக வர்த்தகம்
சீனா -லாவோஸ் இடையிலான ரயில் பாதை மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக சீன சுங்கத்துறை புள்ளிவிவரங்கள் படி தெரிய வரு கிறது.2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு களின் அளவு 27 லட்சத்து 61 ஆயிரம் டன்னாக உயர்ந்துள் ளது.இதன் மதிப்பு 926 கோடி யுவானுக்கும் ( 10 ஆயி ரம் கோடி ரூபாய்) அதிகமாகும். சீன-லாவோஸ் பொருளாதார ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டது முதல் 90 லட்சம் டன்களுக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.