world

img

நீடிக்கும் உலகப் பொருளாதார நெருக்கடி

உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு எதையும் முன்வைக்கும் திராணியற்றதாகவே முதலாளித்துவம் உள்ளது என்பதை நவதாராளவாதம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வருகிறது. அதே  நேரத்தில் அதிகபட்ச லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற தனது குறிக்கோளை தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறது. இதன் விளைவாக, சமநிலையற்ற தன்மை சமூகத்தில் மேலும் தீவிரமாகவும் அது வழி வகுக்கிறது. அதிகரித்துக் கொண்டே போகும் பசி, வறுமை ஆகியவற்றால் சமூகத்தில் மிகப் பெரும்பாலோரின் வாழ்நிலையையும் அது மேலும் மோசமாக்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார கண்ணோட்டம் குறித்த 2023 ஆம் ஆண்டுஅக்டோபருக்கான அறிக்கை உலகளாவிய வளர்ச்சி குறித்து, அதாவது 2022ஆம் ஆண்டில் நிலவிய 3.5 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதம் 2023 ஆம் ஆண்டில் 3.0சதவீதமாகவும், 2024 ஆம் ஆண்டில் 2.9 சத வீதமாகவும் சரியும் என்றும் இது 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு  வரையிலான சராசரி வளர்ச்சிக்கான 3.8 சதவீதத்தை விட குறைவானது என்றும் குறிப்பிட்டிருந்த தனது ஜூலை மாத முன்கணிப்பை உறுதி செய்துள்ளது. முன்னேறிய பொருளாதார நாடுகளின் வளர்ச்சி என்பது 2022 ஆம் ஆண்டில் 2.6 சதவீதம் என்பதிலிருந்து 2023 ஆம் ஆண்டில் 1.5 சதவீதமாகவும், 2024 ஆம் ஆண்டில் 1.4 சதவீதமாகவும் சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமை:உலகளாவிய அளவில் பசிக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் பெருமளவிற்குச் செயலற்று நிற்கிறது என்பதையே 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பசிக்கான அட்டவணை எடுத்துக் காட்டுகிறது. இந்த நெருக்கடியின் விளைவுகள் பல்கிப் பெருகி, தீவிரமாகி வரும் நிலையில் மேலும் மேலும் அதிகமானோர் மிக மோசமான வகையில் பசியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த நிலைமை இந்தாண்டு முழுவதிலும் மேலும் மோசமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டச்சத்தில்லாத நிலை அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்தில்லாதவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 20 லட்சம் என்பதிலிருந்து 73 கோடியே 50 லட்ச மாக உயர்ந்துள்ளது. 

உலகளாவிய பசி: உலகளாவிய அளவில் பசிக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் பெருமளவிற்குச் செயலற்று நிற்கிறது என்பதையே 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பசிக்கான அட்டவணை எடுத்துக் காட்டுகிறது. இந்த நெருக்கடியின் விளைவுகள் பல்கிப் பெருகி, தீவிரமாகி வரும் நிலையில் மேலும் மேலும் அதிகமானோர் மிக மோசமான வகையில் பசியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த நிலைமை இந்தாண்டு முழுவதிலும் மேலும் மோசமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டச்சத்தில்லாத நிலை அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்தில்லாதவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 20 லட்சம் என்பதிலிருந்து 73 கோடியே 50 லட்ச மாக உயர்ந்துள்ளது.