பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் வசம் இருந்த 6 இஸ்ரேல் பணயக்கைதிகள் கொல்லப்பட்ட செய்தி இஸ்ரேல் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பணயக்கைதிகளின் இந்த சாவுக்கு பிரதமர் நேதன்யாகுவின் அலட்சியம்தான் காரணம் என்று குற்றம்சாட்டும் இஸ்ரேல் மக்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது நேதன்யாகுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.