கொழும்பு, ஜூலை 15- இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்து விட்டதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தத் தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி யுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவால் நிலைக்குச் சென்று விட்ட இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டு வருகிறது. இதனால் கொதித்து போயிருக்கும் மக்கள் கடந்த 9-ஆம் தேதி பெரும் கிளர்ச்சியில் இறங்கினர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் திரண்டு ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றினர். இதையடுத்து கோத்தபய ராஜபச்சே, ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பித்து வெளியேறிச் சென்றார்.
பின்னர் அனைத்துக்கட்சிகளும் ராஜி னாமா செய்ய வலியுறுத்தியதால், 13-ஆம் தேதி பதவி விலகுவதாக அறி வித்தார். ஆனால் அறிவித்ததுபோல அன்று அவர் ராஜினாமா செய்ய வில்லை. மாறாக தனது மனைவி லோமா மற்றும் பாதுகாப்பு அதிகாரி களுடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்தவாறே இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். அரசியல் சாசன பிரிவு 37 (1)-ன் கீழ் இந்த உத்தரவை அவர் பிறப் பித்தார். இதன்படி இடைக்கால ஜனாதி பதியான ரணில் விக்ரமசிங்கே, இலங் கையில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் அவசர நிலையைப் பிறப்பித்தார். அத்து டன் இயல்பு நிலையை ஏற்படுத்து வதற்காக மேற்கு மாகாணத்தில் ஊரடங்குக்கும் உத்தரவிட்டார். இதனால் கோபமடைந்த போராட்டக் காரர்கள் பிரதமரின் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். அந்த அலு வலகத்தை கைப்பற்றிய அவர்கள் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற னர்.
இதற்கிடையே மாலத்தீவு சபாநா யகரும், முன்னாள் அதிபருமான முஹ மது நஷீத்தின் உதவியால் மாலத்தீ வில் தஞ்சம் புகுந்த கோத்தபய ராஜ பக்சேவுக்கு அங்கும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக அங்கு வாழும் இலங்கை மக்களும், மாலத்தீவு மக்க ளில் ஒரு பிரிவினரும் போராட்டங்களில் இறங்கினர். அதேநேரம் மாலத்தீவு அரசிலும் கோத்தபய விவகாரம் பெரும் சலசலப்பை கிளப்பியது. இத னால் கோத்தபய ராஜபக்சே மாலத்தீ வில் இருந்து வெளியேறி சௌதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். மனைவி லோமா, பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் ஆகி யோர் தற்போது சிங்கப்பூரில் உள்ளனர். இதை சிங்கப்பூர் அரசும் உறுதி செய்தது. அதேநேரம் சிங்கப்பூரிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு நாடாக தப்பி ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கோத்தபய சிங்கப்பூரின் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்று திரும்பினார். தமது உடல்நலத்தை கருத்தில் கொண்டே அவர் சிங்கப்பூரை தேர்வு செய்துள்ள தாகத் தெரிகிறது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் உடல்நலக்குறை வுக்கு சிகிச்சை பெறுவதற்கு சிங்கப்பூர் செல்வது வழக்கமாகும். நெருக்கடி முற்றியதைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகி னார். ராஜினாமா கடிதத்தை சபாநாய கர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே வுக்கு அவர் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கோத்தபய ராஜினாமா செய்ததை இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த் தன அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து ஜனாதிபதி அலுவலகம் அருகே மக்கள் திரண்டு மகிழ்ச்சிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தற்காலிக ஜனாதிபதி இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார் என்பதை சபாநாயகர் உறுதிப் படுத்தியுள்ளார். இதற்கு முன்னோட் டாக சனிக்கிழமை கூடுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பர் என சபாநாயகர் கூறியுள்ளார்.
இலங்கையில் புதிய ஜனாதிபதி
ஜூலை 20ஆம் தேதி தேர்வு செய்யப்படுகிறார். இலங்கை ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19- ஆம் தேதி பெறப்படும். ஜூலை 20-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகரை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் கிட்டத்தட்ட 5.7 மில்லியன் மக்களுக்கு “உயிர்காக்கும் உதவிகள்” தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை எவ்வளவு நெருக்கடியில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.