கொழும்பு, நவ. 18 - இலங்கையின் புதிய அமைச்சரவை, அந்நாட்டு ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க தலைமையில் திங்களன்று பதவி ஏற்றுக் கொண்டது. இதில், பிரதமராக ஹரிணி அமரசூரிய (54)-வும், அவருடன் 22 அமைச்சர்களும் பதவி யேற்றுக் கொண்டனர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமார துங்க ஆகியோருக்குப் பிறகு, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் கடந்த செப் டம்பர் 21 அன்று நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணியின் வேட்பா ளர் அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். புதிய ஜனாதிபதி பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படு வதற்கு வசதியாகவும், புதிய ஆட்சி சூழலுக்கு ஏற்ப, புதிய அமைச்சரவையை உருவாக்குவ தற்கு ஏதுவாகவும்- அதுவரை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், செப்டம்பர் 24 அன்று இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தலை அறிவித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி கூட்ட ணியின் மூத்த தலைவரான ஹரிணி அமரசூரி யவை, தேர்தல் நடந்து முடியும்வரை இடைக் காலப் பிரதமராக நியமித்தார். இந்நிலையில், நவம்பர் 14 அன்று நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், இடது சாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா தலைமையில் அமைந்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலிலும் இடதுசாரிக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, இடைக்கா லப் பிரதமராக இருந்த ஹரிணி அமரசூரியவே புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும், அவருடன் சேர்ந்து 22 அமைச்சர்க ளும் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சரவையில் நிதி, டிஜிட்டல் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் ஹரிணி அமர சூரியவுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்ச ராக விஜிதா ஹெராத், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக கலாநிதி தம்மிக்க படபாண்டி, எரிசக்தித்துறை அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயக்கொடி, தொழிலாளர் துறை அமைச்சராக பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, வர்த்தகம், உணவுப் பாது காப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்ச ராக வசந்த சமரசிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழர்கள் 2 பேருக்கு அமைச்சர் பதவி இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வான 27 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மட்டும் 13 பேர் வெற்றிபெற்றிருந்தனர். இந்நிலையில், தேசியப்பட்டியலின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ராமலிங்கம் சந்திரசேகரன் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்ச ராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழில் பத வியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மற்றொரு தமிழ் பெண் எம்.பி.யான சரோஜா சாவித்திரி பால்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவ கார அமைச்சராக பதவியேற்றுக் கொண் டுள்ளார்.