world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஐ.நா. ஊழியர்கள் மீதான  தாக்குதலுக்கு கண்டனம்

ஐ.நா  ஊழியர்களின் மீது  சகிக்க  முடியாத அளவில் வன் முறை நடத்தப்படுவதற்கு ஐ.நா. அவை  கண்டனம் தெரி வித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகள வில் 280 ஐ.நா. ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மனிதாபிமான ஊழி யர்கள் மீதான வன்முறையை இயல்பாக்குவ தும், அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுப் பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான செயல் இயக்குநர் ஜாய்ஸ் ம்சுயா கண்டித்துள்ளார். 

அமெரிக்க ராணுவத்தில்  பாலியல் வன்கொடுமை  

அமெரிக்க ராணுவத்தில் இரு மடங்கு பாலியல் வன்கொடு மைகள் நடந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை வெளி வந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 35,900 வழக்குகளும், 2023 ஆம் ஆண்டு 29,000 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதி வாகியுள்ளதாகக் கூறப்பட்டது.  ஆனால் உண் மையில் 75,569 வழக்குகளும், 73,695 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக கருப்பினப் பெண்கள் மற்றும் பால் புதுமையினர் அதிக வன்முறைகளை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் மீண்டும்  கல்வி நிறுவனங்கள் திறப்பு

வங்கதேசத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப் பட்டன. மாணவர்களின் போராட்டம் கலவரமாக மாற்றப் பட்டதை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பிற்காக  ஜூலை 17 முதல் கல்வி நிறுவனங்கள் கால வரை யின்றி மூடப்பட்டன. இந்நிலையில் இடைக்கால அரசு அமைந்த பிறகு  ஆகஸ்ட் 18 முதல் கல் லூரிகள், பல்கலைக்கழகங்கள், மேல் நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன.