world

img

டி20 தொடரில் கே. எல்.ராகுல், அக்‌ஷர் படேல் விலகல்  

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் விலகியுள்ளனர்.  

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஏற்கெனவே 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.  

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 16 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் ஆகியோர் விலகியுள்ளனர்.  

மேலும் இவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.