சிபிஎம் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மிண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், பொலிட் பீரோ உறுப்பினர், பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற்றது.
இதில், கட்சியின் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், இதில் 85 பேர் மத்தியக்குழு உறுப்பினராகவும், 17 பேர் அரசியல் தலைமை குழு உறுப்பினராகவும், மத்தியக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக 3 பேரும், நிரந்தர சிறப்பு அழைப்பாளராக 2 பேரும், மத்திய கட்டுப்பாட்டு குழுவிற்கு 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநாட்டின் நிறைவாக இன்று மாலை 5 மணியளவில் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி, பொதுக்கூட்டம் என்பது நடைபெற உள்ளது.