ரியாத், ஜூலை 19- ஏமன் மீதான தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து பல்வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் முனைப்பில் சவூதி அரேபியா இருக்கிறது. துர்க்கியே (துருக்கி)யின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆயுத விற்பனை நடக்கும் வகையில், அந்நாட்டிடமிருந்து சவூதி அரேபியா வாங்கவிருக்கிறது. ஆளில்லா விமானங்களை துர்க்கியே தருகிறது. அங்காரா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்கள். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவில்லை என்று துர்க்கியேவின் ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன் மீது குற்றச்சாட்டுகள் வரும் நிலையில், ஆளில்லா விமானங்கள் வேண்டும் என்று சவூதி அரேபியா கோரியிருக்கிறது. அதுவும் துர்க்கியேவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கான ஆயுத விற்பனை நடக்கப் போகின்றது. துர்க்கியேவின் ஜனாதிபதி எர்டோகன் தற்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக சவூதி அரேபியா சென்றிருந்தபோதுதான் ஆயுத விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. அதன் நிறைவாக, உடன்பாட்டில் எர்டோகன் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகிய இருவர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.