இனவெறியை தூண்டி விடும் இஸ்ரேல் பிரதமர்
ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களால் “இஸ்ரேலின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்” உருவாகியுள் ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதுடன், புலம் பெயர்ந்து வந்த மக்களை நாட்டிலிருந்து வெளியேற்று வதற்கான திட்டத்தைத் தயாரிக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
இவர்கள் நமது அண்டை நாடுகள்
சீன நாட்டுடனான மும்முனை கடற்படை பயிற்சியில் பங்கேற்க வடகொரியாவை ரஷ்யா பரிந்துரைத்துள்ளது. இது குறித்து, ரஷ்யா வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,“இவர்கள் எமது அண்டை நாடுகள்” எனத் தெரிவித்தார். இந்த கூட்டுப் பயிற்சி சர்வதேச முக்கி யத்துவம் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் வங்கி தலைவர் ஓய்வு
சிங்கப்பூர் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணை யத்தின் தலைவராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவி மேனன் ஓய்வு பெற உள்ளார். இவரைத் தொடர்ந்து சியா டெர் ஜியுன், வங்கித் தலைவராக பதவி யேற்க உள்ளார்.
துருக்கியில் பண வீக்கம் கடும் அதிகரிப்பு
கடந்த மாத இறுதியில் துருக்கியின் பணவீக்கம் 60 சத வீதம் வரை எட்டியது. ஜூலை மாதத்தில் 47.8 சதவீதமாக இருந்த பணவீக்கம் 12 ஆவது மாதமாக ஆகஸ்ட் மாத இறுதியில் 58.9 சதவீதமாக உயர்ந்து விட்டது.
கபான் இடைக்கால ஜனாதிபதி பதவியேற்றார்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கபானில் கிளர்ச்சிக்கு பிறகு ராணுவ தலைமைத் தளபதி பிரைஸ் க்ளாடைா் ஒலிகு குவேமா, நாட்டின் ஜனாதிபதியாக திங்கள்கிழமை பதவி யேற்றுக் கொண்டார். பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ராணுவக் கிளர்ச்சி செய்த 7-வது ஆப்பிரிக்க நாடாக கபான் உள்ளது.