வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் 11 ஆண்டுக்கு முன் நடைபெற்ற எழுச்சியில், சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டது. ஆனால் 2021 ஜூலையில் ஜனாதிபதி செய்த சதி மூலம் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. எகிப்தில் நடைபெற்ற ‘ஆரஞ்சு புரட்சி’ என்ற பெயரிலான நிகழ்வு கள் மூலம் ஜனநாயக உரிமைகள் மீட்கப்பட வில்லை. ஆனால் 2021 ஜூலைக்கு முன்பு பத்தாண்டுகள் துனிசியாவில் ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. தடை செய்யப்பட்டிருந்த எதிர்கட்சிகள் சுதந்திர மாக செயல்பட்டன. ஆனால் 2021 ஜூலை முதல் துனிசியா தொழிலாளர் கட்சி மீது தொடர்ச்சியாக தாக்குதல் நிகழ்த்தப்படு கிறது.
ஜனவரி 14 - ல் சர்வாதிகாரிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கொரோனா தடைகள் எனக்கூறி எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகள் தடை செய்யப்படுகின்றன. உரிமைகளை மீட்க எதிர்க்கட்சிகள் போராட வேண்டியுள்ளது. ஜனாதிபதி கைட்ஸ் சையத் அனைத்து அதி காரங்களையும் தன்னிடம் குவித்துள்ளார். 20 துனிசிய சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள் நாட்டில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை பத்திரிகை நிருபர் கூட்டத்தில் கண்டித்துள்ளன. கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வறுமையில் வாடும் மக்களை மீட்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.