காசாவில் தீவிர பஞ்சம்: மீண்டும் எச்சரிக்கை
காசாவில் தற்போது மோசமடைந்துள்ள மனி தாபிமான நிலைமை “விரைவில் பஞ்சமாக மாறக்கூடும்” என்று உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP) ஏற்கனவே எச்சரித்திருந்தது. இஸ்ரேல் ராணு வம் ஐ.நா. நிவாரண அமைப்பு கொடுத்து வரும் உணவுப்பொருட்களை காசாவிற்குள் செல்ல விடாமல் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதனால் போதிய குடிநீர் உணவு இன்றி மக்கள் மிக மோச மான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை தொடருமானால் அது தீவிர பஞ்சமாக மாறிவிடும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘அமைதியே வேண்டும்’ அமெரிக்கா நாடகம
இஸ்லாமிய நாடுகளில் பரவியுள்ள பயங்கர வாதம்,கொலைவெறித்தாக்குதல்கள், பிரி வினைகளுக்கு அமெரிக்காவின் கொள்கைகளே காரணம் என ஈரான் ராணுவத்தின் தலைமை தளபதி ஹொசைன் சலாமி குற்றம் சாட்டியுள்ளார்.ஈரான் தலைநகரில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகம் கையகப்படுத்தப்பட்ட 45 ஆவது ஆண்டு நிறைவு பேரணியில் சலாமி இதனை தெரிவித்தார்.மேலும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என பேசிக் கொண்டே படுகொலைகளை செய்யும் நாடுதான் அமெரிக்கா என கடுமையாக விமர்சித்துள்ளார்.
எண்ணெய் உற்பத்தி குறைப்பை நீட்டிக்கும் எட்டு நாடுகள்
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள எட்டு உறுப்பு நாடு கள் உற்பத்திக் குறைப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளன. எண்ணெய் விலை தொ டர்ந்து குறைந்து வரும் நிலையில் டிசம்பர் இறுதி வரை உற்பத்தி குறைப்பை நீட்டிக்க முடிவெடுத்துள்ளன. சவூதி அரேபியா, ரஷ்யா, இராக், ஐக்கிய அரபு அமீர கம், குவைத், கஜகஸ்தான், அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகிய எட்டு நாடுகள் இந்த உற்பத்திக் குறைப்பை அறிவித்துள்ளன. இந்நாடுகள் நாளொன்றுக்கு 2.2 கோடி பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்யும்.
சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
சீனாவின் நிரந்தர விண்வெளி ஆய்வு மையத் தில் 6 மாத கால ஆராய்ச்சியை முடித்து விட்டு அந்நாட்டின் 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர். பூமியிலிருந்து சுமார் 393 கிலோ மீட்டர் உயரத்தில் கடந்த 2020 ஆண்டு ஜியாங்காங் என்ற நிரந்தர விண்வெளி மையத் தை சீனா நிலை நிறுத்தியது. 2022 முதல் முழு செயல்பாட்டுக்கு வந்த இந்த விண்வெளி மையத் தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த 3 வீரர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி சீன அரசு விண்வெளிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகா ணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை வெடித்துச் 4 கி.மீ வரை பாறைகள் சிதறியதில் 9 பேர் உயிரிழந் தனர்.வழிந்தோடும் நெருப்புக் குழம்பு , கரும்புகை யால் அப்பகுதி முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் பல கிரா மங்களுக்கு சாம்பல் பரவியதால் சுமார் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.