world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அலுமினியம் இறக்குமதிக்கு  25 சதவீதம் வரி விதிப்பு

அலுமினிய இறக்குமதிக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தியுள்ளார் டிரம்ப். இதில் எந்த விலக்கும் கொடுக்க முடியாது. இது அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக ஆக்குவதற்கான ஆரம்பம். அமெரிக்காவில் தொழில்களையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்குவதற்கான நேரம் இது எனவும் பேசியுள்ளார். டிரம்ப்பின் இந்த வரி விதிப்புகள் அவர் சொல்வதற்கு நேரெதிர் விளைவுகளையே உருவாக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

‘சீனாவுடன் பொருளாதார உறவுகளை ஐரோப்பா அதிகரிக்க வேண்டும்’

ஐரோப்பா தனது பொருளாதார நலன்க ளுக்கு ஒரு சொந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். வீழ்ச்சியடைந்த அமெ ரிக்காவின் கொள்கைகளை ஏற்றுக்கொள் வதை எதிர்க்க வேண்டும் என வெளிநாட்டு வர்த்தகத்திற்கான ஜெர்மன் கூட்டாட்சி சங்க தலைவர் மைக்கேல் ஷூமான் வலியுறுத்தி யுள்ளார். மேலும் உலகளவில்  வர்த்தக அமைப்பின் வெளிப்படைத் தன்மை மற்றும் உறுதித்தன்மையை நிலைநிறுத்த சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஐரோப்பா மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

சூழல் நெருக்கடியில் அர்ஜெண்டினா தீவிரமடையும் காட்டுத் தீ

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அர்ஜெண்டினா மிக மோசமான வகையில் சில  சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. அந்நாட்டில் உருவாகியுள்ள காட்டுத் தீயின் காரணமாக  சுபுட், ரியோ நீக்ரோ, நியூக்வென் ஆகிய மாகாணங்களில் சுமார் 37,100 ஹெக்டேர் காடுகள் எரிந்துள்ளன. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தங்கள் முயற்சிகளை தீவி ரப்படுத்தினாலும் அதிகமான காற்று உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நேர்மையின்மை  இடதுசாரி வேட்பாளர் கண்டனம் 

ஈக்வடார் நாட்டின் தேர்தல் ஆணையம் நேர்மை யுடன் இல்லை என அந்நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி வேட்பாளர்  லூயிசா கோன்சாலஸ் குற்றம் சாட்டியுள்ளார். வாக்குச் சாவடியை பார்வையிடுவது, வாக்குப்பதிவு விவரங்களை பெறுவதற்கு  தனக்கு  தடை விதிப்பதாக தெரிவித்தார். எதிர்க்கட்சியான குடியுரிமை புரட்சி கட்சியின் வேட்பாளர் கோன்சாலஸ் இரண்டாவது சுற்றில் தற்போதைய ஜனாதிபதி டேனியல் நோபோவிற்கு வலுவான போட்டியாளராக உள்ளார். ஈக்வடார் மக்கள்  பெண் ஜனாதிபதியை பெறுவார்கள் என தான்  நம்புவதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள்களுடன் தரை தட்டிய  சீன சரக்கு கப்பல் 

சீன கப்பல் ஒன்று ரஷ்யாவின் நெவேல்ஸ்க் மாவட்ட சகிலேன் கடற்கரையில் 3 நாட்களாக தரைதட்டி நிற்கிறது. சீனாவுக்கு சொந்தமான இக்கப்பலில் 1000 டன் நிலக்கரி, 700 டன் கச்சா எண்ணெய், 100 டன் டீசல் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ரஷ்ய நிபுணர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கப்பலில் இருந்த 20 சீன மாலுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர். ஆபத்துகளை தவிர்ப்பதற்காக அம்மாவட்டம் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.