காசா நிலைமை குறித்து ஐநா பொதுச் செயலாளர் வேதனை
நியூயார்க்,மே 17- காசா நிலைமை குறித்து ஐநா பொதுச் செயலாளர் வேதனை தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்தி ருப்பதாவது, காசாவில் பாலஸ்தீனர்களின் நிலைமை குறித்து வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அது மனிதாபிமானமற்றதாக, கொடூரமானதாக உள்ளது. காசா மீதான தாக்குதல்களும், பாலஸ்தீனர்களின் உணவை தடுத்து பட்டினியில் தள்ளும் கொள்கை உள்ளிட்டவை சர்வதேச சட்டத்தை கேலிக்கூத்தாக்கு கிறது. மனிதாபிமான உதவிகளுக்கு எதிரான தடை களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது தெளிவாக தார்மீகமான முறையில் நடவ டிக்கை எடுப்பதற்கான தருணம் என தெரிவித்துள்ளார்.