world

img

இடது மாற்று இல்லையென்றால் பாசிசம் தலையெடுக்கும்

லண்டன், ஜூலை 18- தற்போது உருவாகியுள்ள சூழ லில் சரியான மாற்றை இடதுசாரி கள் முன்வைக்கவில்லை என்றால்  பாசிசத்தின் பிடியில் சிக்கும் ஆபத்து உள்ளது என்று பிரிட்டனின் தொழி லாளர் கட்சித் தலைவர்களில் ஒருவ ரான ஜெரிமி கோர்பின் எச்சரித்துள்ளார். பல ஐரோப்பிய நாடுகளில் வலது சாரிக் கட்சிகளுக்கான ஆதரவு அதி கரித்து வருகிறது. இடதுசாரிக் கட்சி கள் ஆட்சியில் இருந்த சில நாடு களில் அதிகாரத்தை இழந்து வரு கின்றன. ஸ்பெயினில் நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்த லில் வலதுசாரிக் கட்சிகள் ஆட்சி யைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பிரிட்டனிலும் அதி தீவிர வலதுசாரி கள் செல்வாக்கு பெற்றுவருகிறார்கள். லண்டனின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த தீப்பெட்டித் தொழிற் சாலை ஒன்றில் 1888 ஆம் ஆண்டில் பெண்கள் வேலை நிறுத்தம் செய்த னர். இதுதான் பெண்கள் மேற் கொண்ட முதல் வேலை நிறுத்தம் என்று கருதுகிறார்கள். அந்த வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவுகூரும் வகையில் பெண் கள் திருவிழா கிழக்கு லண்ட னில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டா டப்படுகிறது. நடப்பாண்டின் இந்தக் கொண்டாட்டங்களில் கோர்பின் மற்றும் அவரது இணையர் லாரா ஆல்வரஸ் ஆகிய இருவரும் பங்கேற்று வருகிறார்கள். தங்கள் பங்கேற்பின் ஒரு பகுதி யாக ஊடகப் பேட்டி ஒன்றையும் இரு வரும் அளித்தனர். அதில் பேசிய லாரா ஆல்வரஸ், “தற்போதுள்ள நிலையில்  வலதுசாரி ஆட்சியாளர் களுக்கு சரியான மாற்றாக தொழி லாளர் கட்சி இருக்க முடியாது. அக்கட்சிக்கு கோர்பின் ஐந்து ஆண்டு களுக்குத் தலைவராக இருந்தார். ஆனால் அவரால் கட்சிக்குள் இருந்த ஊழலை அகற்ற முடியவில்லை. நாம் தொடர்ந்து ஊழல் அரசை எதிர்த்துப் போராட வேண்டும்” என்றுகூறினார்.

தனது இணையரின் கருத்தை ஆமோதித்த கோர்பின், “ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள இடதுசாரிகள் உழைக்கும் மக்க ளுக்குத் தேவையான, சரியான மாற்றை முன்வைக்க வேண்டும். அந்த மாற்று, கல்வியையும், சுகா தாரத்தையும் பாதுகாப்பது மற்றும் இளைஞர்களுக்கு உண்மையான நம்பிக்கையை அளிப்பது ஆகிய வற்றைச் செய்ய வேண்டும். இல்லை யென்றால் பாசிசம் தலையெடுத்து விடும். மணியடித்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடுகளில் அதி தீவிர வலதுசாரிகளுக்கு செல்வாக்கு  அதிகரித்துள்ளதை மிகவும் கவலை யோடு கோர்பின் பார்க்கிறார். போர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச் சனைகளால் தங்கள் நாடுகளை  விட்டு வெளியேறி வருபவர்களின் பிரச்சனை அதிதீவிர வலதுசாரி களால் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 7 கோடிப்பேர் உலகம் முழு வதும் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள னர். அவர்கள் வாழ இடம் வேண்டும். அவர்களின் நிலைமை நாளை நம க்கும் வரலாம் என்று எச்சரிக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தை  அகதிகள் காணாமல் போயிருப்பதை கோர்பின் சுட்டிக்காட்டுகிறார். வருங் காலம் பல பதில் அளிக்க முடியாத பல்வேறு கேள்விகளை எழுப்பும் என்ற அவர், அகதிகள் ஏன் இவ்வ ளவு மோசமாக நடத்தப்பட்டார்கள் என்ற கேள்வி எழும் என்று குறிப்பிட் டார்.  வலதுசாரிக் கொள்கைகளின் காரணமாகவே வெளியேற்றப்பட்ட அவர்கள், வலதுசாரிகளின் வெறுப் புணர்வுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.