லண்டன், மே 12- ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர் வினையாற்ற உக்ரைன் தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கையில், அவர்களுக்கு ஆதரவாக ஏவுகணைகளை இங்கிலாந்து அனுப்புகிறது. உக்ரைனிடமிருந்து கைப்பற்றியுள்ள டோன்பாஸ் பகுதியில் தனது தளத்தை ரஷ்யா பலப்படுத்தி வருகிறது. எதிர்த்தாக்கு தல் நடத்தாவிட்டால் அந்த நிலப்பகுதியை மீட்பது என்பது சாத்தியமில்லை என்று உக்ரைன் கருதி வருகிறது. ரஷ்யப்படை கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளிடம் ஆயுதங்கள் தருமாறு தொடர்ந்து உக்ரைன் கோரி வந்தது. அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிரிட்டன் ஸ்ட்ராம் ஷேடோ ஏவு கணைகளை அனுப்பப் போகிறது. இந்த ஏவுகணைகளைப் பெற பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. பிரிட்டனும், பிரான்சும் இணைந்து இந்த ஏவு கணைகளைத் தயாரித்து வருகின்றன. 250 கி.மீ. தொலைவிற்கு சென்று இந்த ஏவுகணைகளால் தாக்குதல்களை நடத்த முடியும். அமெரிக்கா தயாரிக்கும் அடாக்மஸ் என்ற ஏவுகணையை விட சிறிது குறைவான தொலைவைக் கடக்கும் திறனுடையது. அமெரிக்காவின் அந்த ஏவுகணையையும் வழங்குமாறு உக்ரைன் கோரிக்கை வைத்து வருகிறது. ஸ்ட்ராம் ஷேடோ ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சண்டை தொடங்கியதில் இருந்து இத்தகைய ஆதரவைத்தான் உக்ரைன் எதிர்பார்த்து வந்தது என்றும் கூறியுள்ளார்கள். உக்ரைனின் பகுதிக்குள் தான் இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், ரஷ்யாவின் பகுதி களைக் குறிவைத்து இவற்றை இயக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது. தங்களிடமிருந்து ரஷ்யா கைப்பற்றி யுள்ள டோன்பாசின் நான்கு பகுதிகளை யும் மீட்க முடியும் என்று உக்ரைன் நம்புகிறது.