போர்ட்டோரிகோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரீபியன் தீவுகளில் ஒன்றான வடக்கு போர்ட்டோரிகோவில் உள்ள டெசெகியோ தீவுக்கு அப்பால் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமெரிக்க கடலோர காவல்படையினர் 11 பெண்கள் உள்ளிட்ட 31 பேரை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.