world

img

அமெரிக்காவின் காலனி நாடாகி விடலாம்

பயனஸ் அயர்ஸ், ஜூன் 18- அர்ஜெண்டினாவின் கடன் தொல்லை களுக்குத் தீர்வு காண, அமெரிக்காவின் டாலரைத் தங்கள் நாட்டின் நாணயமாக ஏற்றுக் கொண்டு விடலாம் என்று அந்நாட்டின் வலதுசாரிகள் ஆபத் தான ஆலோசனையை முன்வைத்திருக்கிறார்கள். சர்வதேச நிதியத்திடமிருந்து(ஐ.எம்.எப்)  வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த அமைப்பிடமிருந்து ஏராளமான நிபந்த னைகள் கொண்ட திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு சலுகை களை அள்ளித்தருவதில் கவனம் செலுத்திய முந்தைய வலதுசாரி அரசு, அதற்காக ஏராள மான கடன்களை வாங்கிக் குவித்தது. தற்போது  அந்தக் கடன்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தற்போதைய அரசு விரும்புகிறது. இடதுசாரிக் கொள்கைகளை முன்வைப்பவ ரும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான கிறிஸ்டினா பெர்னாண்டஸ், அர்ஜெண்டினாவின் முக்கியமான பிரச்சனையாக ஐ.எம்.எப். 2015 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் தந்த  4 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டாலர் கடனைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் காலகட்டத் தில் வலதுசாரித் தலைவரான மவுரிசியோ மக்ரி ஜனாதிபதியாக இருந்தார். இந்த நெருக்கடி  குறித்து அனைத்து அரசியல் சக்திகளும் அமர்ந்து பேச வேண்டும் என்றும், இந்த  நெருக்கடி தற்போதைய அரசால் உருவாக்கப்பட வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியை எப்படியாவது தீர்த்து வைத்து விட வேண்டும் என்று தங்கள் அரசு முனைப்புடன் இருப்பதாகக் கூறும் கிறிஸ்டினா, “கடன்களைத் தீர்ப்பதற்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோருபவர்களுக்கு எதிராக தேசபக்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். கடன்களைக் கட்டுவது குறித்து ஐ.எம்.எப். அமைப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசிய மாகும். டாலர் பற்றாக்குறை என்ற பிரச்சனை யை நாம் உடனடியாகத் தீர்த்தாக வேண்டும் “ என்று கூறினார். மக்கள் நலக் கொள்கைகளை கிறிஸ்டினா முன்னிறுத்தி வருவதால் அவர் மீது பல்வேறு  குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரது செயல்பாடு களை முடக்க முந்தைய வலதுசாரி அரசு முயற்சித்தது. ஒவ்வொரு வழக்காக அவர் விடுவிக்கப்பட்டு வருகிறார். அவரது வழக்குகள் விசாரணைக்கு வருகையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் குழுமி அவருக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புகிறார்கள். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்றும் அவர்களிடம் பேசும் தலைவர்கள் விளக்குகிறார்கள்.

பெருந்திரள் பேரணிகள்

இந்நிலையில், ஐ.எம்.எப். போடும் நிபந்தனை களுக்கு எதிராக அர்ஜெண்டினாவின் பல  பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகள் நடை பெற்றுள்ளன. தலைநகர் பயனோஸ் அயர்சில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தங்கள் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் ஐ.எம்.எப். தலையிடக்கூடாது என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதே கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஏராளமான மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடத்தப்பட்டன. அமெரிக்க டாலர்களில் திருப்பித் தர வேண்டிய கடன்களுக்கான வட்டியே பெருமள வில் இருப்பதால், தற்போதைய அரசு அக்கடன் களைத் திருப்பிச் செலுத்துவதில் திணறுகிறது. இதன் காரணமாக நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடன்களைத் திரும்பச் செலுத்துவது குறித்த மறு பேச்சுவார்த்தைக்கு வராமல் ஐ.எம்.எப். இழுத்தடிக்கிறது.  இந்நிலையில், அமெரிக்காவின் டாலரைத் தங்கள் நாணயமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று அர்ஜெண்டினாவின் வலதுசாரித் தலைவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவின் காலனி நாடாக மாறுவதில்தான் இது முடியும் என்றும், நாட்டிற்கு ஆபத்தில் முடியும் மோச மான பரிந்துரை என்றும் இடதுசாரிக் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக் கிறார்கள்.