உலகெங்கிலும் உள்ள தோல் மருத்துவர்கள் அளித்துள்ள சான்றுகளின் படி, ஒரு நபரின் கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விசித்திரமான “சொறி” உண்மையிலேயே கொரோனா வைரஸால் ஏற்பட்டதா என்பதை அறிய ஆராய்ச்சி தேவை.
இளஞ்சிவப்பு -சிவப்பு நிற சொறி காலப்போக்கில் ஊதா நிறமாக மாறும். மேலும் சிலருக்கு எரியும் உணர்வை ஏற்படுத்தும். வீக்கம் இரண்டு முதல் மூன்று வாரங்களில் சிகிச்சையின்றி மறைந்துவிடும் என்கிறார் என்று பாஸ்டனில் உள்ள மஸ்ஸாசூஸெட்ஸ் பொது மருத்துவமனையின் தோல் மருத்துவரான டாக்டர் எஸ்தர் ஃப்ரீமேன் தி. மேலும் அவர் கூறுகையில், கால்விரல்களில் இருக்கும் அறிகுறிகள் தெரியாது. இந்த விசித்திரமான சொறி 20 அல்லது 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை பாதிக்கும் என்றார்.
வைரசுக்கும் தோலுக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்ள இந்த இது உதவும் என்றும் தோல் பிரச்சினைகள் ஏதேனும் ஆரம்பகால நோய்களைக் கண்டறிய உதவுமா என்பதை தீர்மானிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்,
ஒரு வேளை யாருக்காவது கால் விரல்களில் வீக்கம் இருந்தால் அவர்கள் தோல் மருத்துவர், அல்லது கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களை பரிசோதனைக்குட்படுத்திக் கொள்வது நல்லது.
லைவ் சயின்ஸ் இணையதளத்திலிருந்து