உடுமலை, ஜூலை 19- உடுமலை அருகே கண்டறியப் ழுட்டுள்ள 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை பாதுகாக்க தொல்லியல் துறையி னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரலாற்று ஆய்வா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை கல்லாபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மதகடிப்புதூர். இங்குள்ள பெரிய மலையின் குகைக்குள் பழைமையான வெள்ளை நிற ஓவியங்கள் அதிகளவு காணப்படுகின்றன. பண்டைய கால மனித வாழ்வியல் மற்றும் மலைக் குகைகளில் மனிதர்கள் இனக்குழு வாக வசித்து வந்ததற்கான சான்று கள், குறியீடுகள் இந்த பாறை ஓவியங் களில் காணப்படுகின்றன. குறிப்பாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒற்றுமையாக மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் நடனம், வேட்டைமுறை, சிங்கம், புலி உள்ளிட்ட வனவிலங்கு களால் ஏற்பட்ட ஆபத்துக்களை குறியீடுகள் மூலம் எச்சரிக்கும் ஓவி யங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இங்குள்ள பாறை ஓவி யங்களில் சிறப்பானதாக , பெரிய அளவிலான கை அச்சு ஒன்று காணப் படுகிறது. இந்த ஓவியங்கள் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆண்டு பழமையானதாக கூறப்படுகி றது. எனவே, இந்தபாறை ஓவியங் கள் குறித்து தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு செய்து அதனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.