உடுமலை, மார்ச் 11- ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட அணைகள் இன் னும் கட்டப்படாமல் உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையிலாவது அணை களை கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண் டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை தாலுக்கா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் அணை கள் கட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. அது, இன்று வரை கட்டப்படாமல் உள்ளது. தமிழ் நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இம் மாத இறுதியில் தாக்கல் செய்ய உள்ள தால் விவசாயிகளுக்கு பயன் கிடைக் கும் வகையில், இந்த அணைகளை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்பர் அமராவதி திட்டம்:
அமராவதி அணைக்கு நீர் ஆதார மாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின் னாறு ஆகிய மூன்று ஆறுகள் இணைந்து கூட்டாறாக அமராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த கூட்டாறு வரும் வழியில் துாவானம் அருவி அமைத்துள்ள இடத்தில் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அப்பர் அமாரவதி அணை என்ற பெய ரில் ஒரு தடுப்பு அணை கட்ட முடிவு செய்யபட்டது. இந்த அணையில் சுமார் 5 டிஎம்சி நீரை சேமித்து வைத்து நீர் மின்சாரம் உற்பத்தியும், கோடை காலங் களில் அப்பர் அமாரவதி அணையில் இருந்து தண்ணீரை அமராவதி அணைக்கு கொண்டு செல்ல முடி யும்.
ஆணைமலையாறு - நல்லாறு அணை திட்டம்
பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத் தில் கட்டப்பட்ட திருமூர்த்தி அணைக்கு மேல் நீராறு அணை வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தண் ணீர் வருகிறது. தண்ணீர் வரும் தூரத்தை குறைக்கும் வகையிலும், கூடுதலாக தண்ணிரை சேமிக்கும் வகையில் திரு மூர்த்தி அணையில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவடப்பு பகுதியில் இருக்கும் நல்லாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டம் வகுக்கப் பட்டது. இந்த அணைகள் கட்டப்பட்டால் நல்லாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக 18 கிலோ மீட்டர் தூரத்தில் திரு மூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து சேரும். மேலும் கூடுதலாக மழைக்கா லங்களில் தண்ணீரை சேமித்துவைத்து கொள்ளமுடியும். இதனால் 8 டிஎம்சி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு வறட்சிகாலங்களில் கிடைக்கும். கடு மையான வறட்சி காலங்களில் அமார வதி மற்றம் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் கிடைக்க வகுக்கபட்ட திட்டங் களை நிறைவேற்றும் வகையில் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.