what-they-told

img

இடி, மின்னல், மழையின்போது என்ன செய்ய வேண்டும்

கோவை, நவ.2- இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல் போன் போன்ற மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக் களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கோவை மின் பகிர் மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் (பொ) சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது, இடி அல்லது மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையாலான பெரிய கட்டிடம், வீடு  அல்லது பஸ், வேன், கார் போன்ற வற்றில் தஞ்சமடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத் தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சமடையக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு  போன்றவற்றின் அருகில் இருக் கக்கூடாது. இடி இடிக்கும்போது  கண்டிப்பாக டிவிக்கு வரும் கேபிள் இணைப்பை துண்டித்துவிட வேண் டும்.

மின்மாற்றியில் பியூஸ் போயி ருந்தால் அதனை சரி செய்ய மின் ஊழியர்களிடம் தெரிவிக்க வேண் டும். மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பி கள், மின் பகிர்வு பெட் டிகளின் இழுவை கம்பிகள் அருகே செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள மின் சாதனத்தில் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே வீட் டிலுள்ள மெயின் சுவிட்ச்சை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து சென்று அணைத்துவிட வேண்டும்.  பின்னர் உடனடியாக மின்வா ரிய அலுவலகத்துக்கு தகவல் தெரி விக்க வேண்டும். இடி. மின்னலின் போது டி.வி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்ற மின் சாதனப் பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். ஈர மான கைகளால் சுவிட்சை தொட  வேண்டாம். மழை பெய்யும்போது கேபிள் வயர்களை தொடக் கூடாது. மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங் கியுள்ள நிலையில், பொதுமக்கள்  வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை கைள் தெரிவிக்கப்பட்டுள்ளது.