what-they-told

img

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

மதுராந்தகம்,நவ.15- வேடந்தாங்கல் பறவைகள் சரணா லயத்திற்கு தற்போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்த வண்ணம் உள்ளன. சரணாலயத்தில் 15 வகையான இந்தியப்பறவைகள் மற்றும் வெளிநாட்டு அரிய வகை பறவை இனங்கள் வந்துள்ளன. இதில் இந்தியாவில் வாழ்கின்ற  உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு, சிறிய நீர்காகம் உள்ளிட்ட வெளி நாட்டு அரிய பறவை இனங்களான வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கிடா, கரண்டி வாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பெரிய நீர் காகம் உள்ளிட்ட பறவை இனங்கள் உள்ளன.  மேலும் சரணாலயத்திற்கு வாத்து இனங்களான சிரவி வாத்து, புள்ளி மூக்கு வாத்து ஆகிய இரண்டு வகை வந்துள்ளன.  இந்த பறவைகள் பாகிஸ்தான், சைபீரியா பர்மா, இலங்கை , வங்காள தேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வருகை தந்து மீண்டும் குஞ்சு பொறித்து தங்கள் நாடு களுக்கே திரும்பி சென்று விடும். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வேடந்தாங்கல் சரணால யத்துக்கு இதுவரை 5 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள 10க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஏரி யில் உள்ள மரங்களில் கூடுகட்ட தொடங்கி இருக்கிறது.  அரியவகை பறவை இனங்கள் இன்னும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.