‘சிக்னலில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன’
“தலைவர்கள் சென்றோம். அனை வரும் பாஜக அலுவலகத்திற்கு அருகே இருந்த ஜி.ஆர்.டி முன்பாக கூடி னோம். அங்கிருந்து பாஜக அலுவல கத்திற்கு செல்லும் போது தேனாம்பேட்டை சிக்னலில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. எனது வண்டி முன்னால் இருந்ததால் நாங்கள் சீக்கிரம் வந்துவிட்டோம். அப்படி சீக்கிரமே வந்ததால் நானும் தங்கமணியும் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரு கைக்காகத்தான் காத்திருந்தோம். உடனே அதை பாஜக அலுவலக வாசலில் காத்தி ருந்ததாக பரப்பி விட்டனர். அது உண்மை நிலை இல்லை. மொத்தமாக சென்று சந்திக்க வேண்டும் என்பதற்காகவே காத்தி ருந்தோம்.
‘ஓபிஎஸ் நோட்டாவிற்கும் கீழே போய்விடுவார்’
ஓபிஎஸ் குஜராத் போவதைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்... அவர் ஏன் போனார் என்று அவரிடம் கேளுங்கள். டிவி ஷன் பெஞ்ச் தீர்ப்புப் படி அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பிறகு ஓபிஎஸ் எப்படி அவர்தான் அதிமுக என்று சொல்ல முடியும்? அவர் சொல்வது சட்ட ரீதியாகவும் தவறு. திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்படு கிறார். அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும்; அதன் மூலம் அதிமுகவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என செயல்படுவதாக தொண்டர்கள் நினைக் கின்றனர். ஓபிஎஸ் இந்த தேர்தலில் போட்டியிட்டால் சுயேட்சை வேட்பாளரா கத்தான் மக்கள் கருதுவார்கள். இந்த தேர்தலோடு ஓபிஎஸ் கதை முடியும் அள வுக்குத்தான் இருக்கும். நோட்டாவிற்கும் கீழே போய்விடுவார்.
(அதிமுகவின் டி.ஜெயகுமார், செய்தியாளர் சந்திப்பில்)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக் காக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து தங்க ளது தரப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின் றனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி, ஜான்பாண்டியன், ஜி.கே.வாசன் ஆகியோரை சந் தித்து ஆதரவு கோரினர். அதேபோல ஓ.பன்னீர்செல் வம் தங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆத ரவு கோரினார். ஜி.கே.வாசன் யாருக்கு ஆதரவு என வெளிப் படையாக அறிவிக்காத நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி எடப்பாடி பழனிச் சாமிக்கும், ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர் களுக்கும் ஆதரவு எனக் கூறி யிருக்கிறார்கள்.
கமலாலயத்தில் காத்துக் கிடந்த அதிமுக
ஈரோடு தேர்தலில் ஆத ரவு கோரி பாஜக தலைமை அலுவலகமான கமலால யத்தில் அதிமுக நிர்வாகிகள் சனிக்கிழமை மாலை காத்துக் கிடந்தனர். முதலில் எடப்பாடி தரப்பும் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை, எச்.ராஜா, நாராயணன் ஆகியோரை சந்தித்து தேர்த லில் தங்கள் தரப்புக்கு ஆதர வளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அண்ணாமலை வரு கைக்காக கமலாலய வாச லில் அதிமுக நிர்வாகிகள் காத்திருந்ததாகவும் 15 நிமி டங்களுக்குள் சந்திப்பு முடிந்து விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், மதுரை யில் செய்தியாளர்களை சந் தித்த பாஜக அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆ தரவு அளிப்பதா அல்லது போட்டியிடுவதா என்பது குறித்து எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. தேசிய தலைமை முடிவு செய்த பிறகு செய்தியாளர் களை சந்தித்து கூறுகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.